இட்லி

1000 ஆண்டுகள் பாரம்பரிய உணவாக இட்லி இருக்கின்றது. Shivakotiacharya எனும் கன்னட எழுத்தாளர்  Vaddaradhane எனும் புத்தகத்தில் இட்லியினை பற்றி முதல் முதலில் எழுதி இருக்கின்றார். இந்நூல் கி.பி  9ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.  

இட்லி போன்று  அதீத நுட்பத்துடன் நொதித்து ஒரு உணவை தயாரிக்கும் முறை உலகில் வேறு எங்கும் இல்லை என்கிறார் கிளாட் ஆல்வரிஸ். இத்தனை ஆண்டுகள் பாரம்பரியம் மிகுந்த இட்லி இன்றும் நம் உணவில் இடம் பெறுவதற்கு அதன் சிறப்பு தன்மைதான் காரணம். இட்லி எளிதில் செரிமானகும் உணவு, செய்வதும் சுலபம்.

இட்லி பொடி

இட்லி சிறந்த காலை உணவாக இருந்தாலும் அவசர அவசரமாக காலையில் கிளம்புவர்களுக்கு என்ன குழம்பு வைக்கலாம் என்று யோசிப்பதற்கே பாதி நேரம் போய் விடுகிறது.


அதனால் வீட்டில் இட்லி பொடி இருந்தால் காலை உணவு இன்னும் சுலபமாகி விடும்.



நம்ப நேட்டிவ் ஸ்பெஷல் சுவையும், மணமும் நிறைந்த முழுக்க முழுக்க கைகளால் செய்யப்பட்ட  திருநெல்வேலி குருணை இட்லி பொடியினை உங்களுக்காக வழங்குகிறது.   

Idly


1000 years of traditional food is Idly.  Kannada author Shivakotiacharya first wrote about Idly in his book Vaddaradhane. This book belongs to the 9th century AD.

Claude Alvares says that there is no other place in the world where food is prepared with such extreme techniques as Idly. 1000 years of tradition Idli has been a place even today for our breakfast. Idly is easy to digest and easy to prepare.

Idly Podi

Idly is the best breakfast but for those who have to leave in a hurry in the morning, half the time is spent thinking about what Curry (Kulambu) to prepare today.

So having Idly podi at home will make breakfast even easier.



Native Special delivers the tirunelveli Kurunai Idli Podi. It’s absolutely full of flavor and aroma.

 

தமிழர் உணவின் அறிவியல் – (The Tamil Food Science)

ஒரு நிலப்பரப்பின் தட்பவெட்ப நிலையே அங்கு வாழும் மக்களின் உணவுப் பழக்கத்தைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணி. எடுத்துக் காட்டாக அமெரிக்கா, கனடா போன்ற குளிரான பகுதிகளில் தயிர் பயன்பாட்டில் இல்லை காரணம் குளிர் பாக்டீரியாவின் வளர்ச்சி வேகத்தைக் கட்டுப் படுத்தும் அதனால் அவர்கள் அதிகம் சீஸ் பயன்படுத்துகிறார்கள். ஆனால் நம்மைப் போன்ற வெப்பப் பகுதிகளில் பெரும்பாலும் தயிர் உணவின் முக்கிய பகுதியாய் இருக்கும் காரணம் வெப்பம் பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

ஒரு இனக்குழுவின் உணவுக்கு கலாச்சாரமே அவர்களின் நாகரிக வளர்ச்சிப் பாதையின் தொடர்புச் சங்கிலி. ஒரு இனக்குழு தனது நிலப்பரப்பில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தனது உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்கிறது. பின்பு தங்களின் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் உணவுப் பழக்கங்களும் பரிணாம வளர்ச்சி பெற்று உணவே மருந்து எனும் நிலையை நோக்கி நகர்கிறது. தேங்காய், நொங்கு, பதநீர், தேன் போன்ற இயற்கை உணவுகளே நமது உணவுக்கு கலாச்சாரத்தின் துவக்கம். பின்பு நிலத்தைப் பக்குவப படுத்தி படிப்படியாக உணவின் அடுத்த படி நிலைக்கு தங்களை நகர்த்திக் கொண்டனர் தமிழர்கள்.

எந்த ஒரு இனக்குழு தங்களுக்கு தேவையான சர்க்கரைக்கான தேவைகளை உணர்ந்து அதற்கான வழிமுறைகளைக் கண்டதோ அவை அனைத்தும் நாகரிக வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலைக் கண்டன. அவ்வகையில் தேனிலிருந்து நகர்ந்து கருப்பட்டியைத் தங்களின் உணவின் தேவைக்காக முதன்முதலில் தமிழர்கள் பயன்படுத்தத் துவங்கியதே உலகின் முதல் நாகரிக மேம்பாடு. அறிவியலோ அல்லது அனுபவமோ, ஒரு அறிவுசார் இனக்குழுவினாலேயே இது சாத்திய படும்.

இப்படி உலகின் தலை சிறந்த உணவுக்கு கலாச்சாரத்தையும், தொடர்ச்சியையும் கொண்டுள்ள தமிழர்கள் இன்றுவரை அதனை அறிவியல் பூர்வமாக ஆவணப் படுத்தும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. வைன், பிரெட் போன்றவற்றிற்கு உள்ள ஆவணங்களில் நூறில் ஒரு பங்கு கூட கல், பதநீர், புட்டு போன்றவற்றிற்கு இல்லை. இவற்றை ஆவணப் படுத்தும் முதல் முயற்சியின் துவக்கமே இந்த “தமிழர் உணவின் அறிவியல்” தொடரின் நோக்கம்.

இதன் துவக்கமாக நமது உணவுக்கு கலாச்சார வளர்ச்சியின் முதல் வித்தான கருப்பட்டியின் ஆச்சர்யமான அறிவியல் தகவல்கள் பற்றி அடுத்த வாரம் காணலாம்.

இத்தொடருக்காக அறிவியல் ரீதியான தகவல்களைத் தந்து உதவும் அமெரிக்கா வாழ் விஞ்ஞானி திரு. அலெக்ஸ் கோம்ஸ் அவர்களுக்கு nativespecial.com இன் நன்றிகள்.

 அடுத்த பகுதி – healthy karuppati

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :