துவர்ப்பு | தமிழர் உணவின் அறிவியல் – பகுதி 7

(முந்தைய பகுதி)

அறுசுவைப் பட்டியலில் அதிகம் பேசப்படாத சுவை துவர்ப்பு. பெரும்பாலும் கனியாத கனிகளை அறிய துவர்ப்பு சுவை பயன்படுகிறது. துவர்ப்பு சுவைக்குள்ள ஒரு தனிச் சிறப்பு யாதெனில், நமது நாவிலும், உணவுக் குழாயிலும் உள்ள செதில் துவாரங்களைத் திறந்து மூடச் செய்து உணவுப் பாதையை சுத்தம் செய்து விடும். வேறெந்த சுவைக்கும் இல்லாத இந்த சிறப்பு துவர்ப்பிற்கு மட்டுமே உரியதாகும்.


டேனின் (Tanin) எனும் ரசாயனம் தான் துவர்ப்பு சுவைக்கான காரணம். மரப்பட்டை, கனிகளின் தோள் என தாவரங்களை பூச்சித் தாக்குதலில் இருந்து காப்பது இந்தத் துவர்ப்பு சுவை தரும் டேனின் தான். எனவே தான் துவர்ப்பு சுவை மிகுந்த காய்களை பூச்சிகள் அதிகம் தாக்குவத்தில்லை. எடுத்துக்காட்டாக சேனைக் கிழங்குகள் பூச்சித் தாக்குதலுக்கு ஆட்படுவதே இல்லை. எனவே வறட்சி காலங்களிலும், பூச்சித் தோற்று காலங்களிலும் உணவுக்கான பொருளாக, துவர்ப்பு சுவை மிகுந்த சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, போன்ற காய் வகைகள் தான் பெரும்பாலும் பயன்படுத்தப் பட்டது.

இந்த டேனின் அதிகம் உள்ள உணவினைச் சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிக்கப் பட்டு விடும், எனவே தான் துவர்ப்பு சுவை மிகுந்த அனைத்து காய் வகைகளும் தமிழர் சமையல் முறையில் முதலில் நீரில் வேக வைக்கப் பட்டு பிறகு சமைக்கப் பட்டன. நீரில் வேகும் பொழுது டேனின் பிரிந்து விடுவதால் துவர்ப்பு சுவை குறைந்து உண்பதற்கு ஏற்ற சுவை பெறுகிறது.


இவ்வாறு தமது நிலப்பரப்பில் கிடைக்கப் பெரும் பொருட்களைக் கொண்டு அதன் தன்மைக்கு ஏற்ப சமைத்து உண்ணும் வழிமுறைகளை பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே கைக்கொண்டிருந்தது தமிழ்ச் சமூகம்.

அதீத துவர்ப்பினைக் கொண்ட நாவல் பழத்தினைச் சுவைக்க வந்த ஒளவை “சுட்ட பழம் வேண்டுமா” எனும் கூற்றில் தமிழ் கடவுள் முருகனிடம் தோல்வியுற்றதை எண்ணி வெட்க்கி ஒளவையார் பாடிய பாடல்,

கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும் – பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்

அதே போல் அதிக துவர்ப்பினைக் கொண்ட இன்னொரு கனியான நெல்லிக் கனியை அதியமானுக்கு வழங்கிய வரலாறும் நமது இலக்கியத்தில் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே குறிப்பிடப்பட்டிருப்பது, துவர்ப்பு முதற் கொண்டு அனைத்து சுவைகளையும் பகுத்து உணவுக் கலாச்சாரத்தின் உச்சானிக் கொம்பில் வாழ்ந்து வந்த சமூகமாக நாம் திகழ்ந்துள்ளோம் என்பதற்கான சான்றாகும்.

இனிப்பு, கசப்பு, புளிப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு என அறுசுவைகளின் அடிப்படை அறிந்து அதனைத் தமிழர்கள் எவ்வாறு தமது உணவு முறையில் பயன்படுத்தி வந்தனர் என்பதை கடந்த இதுவரை வெளிவந்த பகுதிகளில் பார்த்தோம். இனி வரும் பகுதிகளில் நமது சமையல் முறையையும் அதன் பின்னிருக்கும் அறிவியலைப் பற்றியும் காணலாம்.

நம்ம ஊர் சுவை மிகுந்த பண்டங்களை தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) இணையத்தில் ஆர்டர் செய்யலாம்.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Subscribe to get our Latest Updates on your Email!

உப்பு (SALT) |தமிழர் உணவின் அறிவியல்-3

அமெரிக்கா வாழ் ஆராய்ச்சியாளர் திரு. அலெக்ஸ் கோம்ஸ் அவர்களின் வழிகாட்டுதலில் nativespecial.com வெளியிடும் “தமிழர் உணவின் அறிவியல்” தொடர

(முந்தைய பகுதி)

பகுதி-3
உப்பு(SALT)

உப்பு, உலகின் முதல் வணிகப் பொருள். உயிர் வாழ்விற்கு உப்பு அத்தியாவசியம். நமது உணர்வுகளைக் கடத்தும் நரம்பு மண்டலத்தின் இயக்கத்திற்கான காரணி உப்பு தான். எந்த சமூகம் உப்பின் தேவையை உணர்ந்து உற்பத்தி செய்யத் துவங்கியதோ அவையே நிலைத்து வாழ்ந்து நாகரிக வளர்ச்சி பெற்றது. எனவேதான் உலகின் பழமையான நாகரீகங்கள் அனைத்தும் ஆறும், கடலும் சேரும் டெல்டா பகுதிகளில் வளர்ந்தன. எகிப்தின் நைல் ஆற்றுப் படுகையும், தமிழகத்தின் காவேரி ஆற்றுப் படுகையும் தான் இவர்களின் தொன்மையான நாகரிகத்திற்கு அடிப்படை.

முதலில் கடல் நீரை நேரடியாகத் தங்களின் உப்பின் தேவைக்குப் பயன்படுத்தினர் பிறகு அதனை நெய்து உப்புக் கல்லாக்கும் வழிமுறைகள் மெல்ல பயன்பாட்டிற்கு வந்தன. உலகின் முதல் உப்பளம் நமது வீட்டுத் தாளிப் பானைகள் தான். தாளிப் பானைகள் அடுக்குகளாக நமது வீடுகளில் கண்டிருப்போம், அதில் மேல் பானை எப்பொழுதும் உப்புப் பானையாகத் தான் இருக்கும். மேலும் முதல் பானை மூடி இல்லாத பானையாகத்தான் இருக்கும். அதில் கடல் நீர் நிரப்பி வைத்து அது காற்றில் மெல்லக் காய்ந்து உப்புக்கு கட்டியாகி விடும், பிறகு அதனை சமையலுக்குப் பயன்படுத்தினர். இந்த முறை உலகின் வேறெந்த பகுதியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு நிலப் பகுதியில் உள்ள மக்களுக்கு உப்பின் தேவை இருந்த காரணத்தால் உப்பளங்கள் உருவாக்கப் பட்டு கடலோரப் பகுதிகளில் இருந்து உப்பு நிலப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டது.

உப்பின் அத்தியாவசியத் தேவையினால் உலகின் முதல் வணிகப் பொருளானது உப்பு. கடல் கடந்து உப்பினை பல நாடுகளுக்கு அனுப்பிய முதல் அரசு பாண்டியர்களினது ஆகும். தூத்துக்குடி, கோவளம் ஆகிய இடங்களில் பெரும் உப்பளங்கள் நிறுவப் பட்டன. உப்பு விளையும் களத்துக்கு அளம் என்று பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டினர். கோவளம் (கோ அளம்) பெயர்க்க காரணமும் இதுதான்.

உப்பின் உற்பத்திற்குப் பின்னரே பதப் படுத்துதல் எனும் முறையே உருவானது. உலகில் வளர்ந்து வந்த நாகரிகங்களில் உச்சானிக் கொம்பில் இருந்த தமிழர்கள் உப்பினைக் கொண்டு உணவினைப் பதக் படுத்தும் முறையைத் துவங்கினர். உப்பிற்கு நீரை உறிஞ்சும் திறன் உண்டு என்பதை அறிந்து, உணவுப் பொருளின் நீரினை உறிஞ்சி விட்டால் அதில் நுண்ணுயிர்கள் பெறுக வழி இல்லாமல் கெடாமல் இருக்கும் எனும் அறிவியல் அறிவின் விளைவாக ஊறுகாய், கருவாடு போன்ற உணவுப் பொருட்களை உருவாக்கினர். நார்த்தங்காய், எலுமிச்சை போன்ற பொருட்களை ஊறுகாய்க்கு பயன்படுத்திய காரணம் அவற்றில் தண்ணீர் குறைவாகவும், சிட்ரிக் அமிலம் அதிகமாகவும் இருப்பதால் அதிக நேரம் காய வைக்கத் தேவை இல்லை.


இது மிகப் பெரிய நாகரிக மாற்றத்தை உருவாக்கியது. பயணத்தின் பொது உணவுத் தேவையை நிறைவு செய்ய, வறட்சி காலங்களுக்கு உணவைச் சேகரித்து வைத்துக் கொள்ள என பெரும் வாழ்வியல் மாற்றத்தினை ஏற்படுத்திய தருணம் இது. இன்றைய பெட்ரோல் போல அன்று உலகின் அதி முக்கிய வணிகப் பொருள் உப்பாக இருந்தது. அதன் வணிகம் பாண்டியர்களின் கையில் இருந்தது.

சேந்தன் பூதனார் பாடலொன்று அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் ‘வெண்கல் அமிழ்தம்’ என்று உப்பு உரைக்கப்பட்டுள்ளது.

அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்

உணங்குதிறம் பெயர்த்த வெண்கல் அமிழ்தம்

குடபுல மருங்கின் உய்ம்மார், புள்ஓர்த்துப்

படை அமைத்து எழுந்த பெருஞ்செல் ஆடவர்

நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதைக்

குறைக்குளம்பு உதைத்த கல்பிறழ் இயவு (அகம். 207: 1-6)

‘கடலினது நீர் பரவிய உப்பளத்தில் விளைந்து நன்கு காய்ந்த அமிழ்தமாகிய வெண்ணிற உப்பினை மேற்குத் திசையில் உள்ள நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்பதற்காக, வீரம் மிக்க ஆடவர் நல்ல நிமித்தம் பார்ப்பர். அது தெரிந்தவுடன் படைகளை ஆயத்தம் செய்து உப்பு மூட்டைகளை வெண்மையான முதுகை உடைய கழுதைகளின் மீது ஏற்றிக்கொண்டு செல்வர். மலைச் சாரலில் அவை செல்லும் போது குளம்புகள் உதைப்பதால் கற்கள் பிறழ்ந்து கிடக்கும். அப்படிப்பட்ட கொடுமை யான பாலை நில வழியில் எம் மகளை அழைத்துக்கொண்டு போயிருக்கிறானே கொடுமைக்காரன்’ என்று வளர்ப்புத் தாய் புலம்புவதாக நீண்டு செல்லும்.

நெய்தல் நிலப் பகுதியில் விளைந்த உப்பைப் பிற நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்யும் வாணிபத் தொழில் நடைபெற்றுள்ளதை இப்பாடல் வெளிப்படுத்துகிறது. நெய்தல் நிலமாகிய கடற்கரைப் பகுதிகள் தமிழ்நாட்டைச் சூழ்ந்திருந்த காரணத்தால் பரவலாக உப்பளங்கள் இருந்துள்ளன. உப்பு தமிழர் வாழ்க்கையில் நீண்ட பாரம்பரியம் மிக்கதும், ஆழமானதுமான பண்பாட்டுக் குறியீடு.

உப்பும், சக்கரையும் உற்பத்தி செய்யத் துவங்கிய முதல் சமூகம் வாழ்வியலின் அடுத்த கட்டமாக சமையலை நோக்கி நகர்ந்தது. இன்று வரை பல நாடுகளில் உணவு வேகவைத்தல் எனும் நிலை தாண்டாத சூழலில் நாம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே சமையல் எனும் இடத்திற்கு நகர்ந்ததற்கான அடிப்படை உப்பும், சக்கரையும் உற்பத்தி செய்யத் துவங்கியதால் தான்.

சமையலில் புளியின் பங்கும் அதன் அறிவியல் நோக்கங்கள் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்..

நம்ம ஊர் திண்பண்டங்கள் தற்பொழுது nativespecial.com இணைய தளத்தில் ஆன்லைனில் வாங்கலாம்

“தமிழர் உணவின் அறிவியல்” அடுத்த பகுதி.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Subscribe to get our Latest Updates on your Email!

கசப்பு | தமிழர் உணவின் அறிவியல் – பகுதி 6

(முந்தைய பகுதி)

கசப்பு விருப்பத்திற்குரிய ஒரு சுவையாக இல்லாததாலோ என்னவோ இன்று உலகில் உள்ள அநேக மக்களின் உணவுப் பழக்கத்தில் கசப்புக்கான இடம் அறவே இல்லை. ஆனால் ஏன் தமிழர்கள் உணவு முறையில் மட்டும் கசப்புக்கு இத்தனை முக்கியத்துவம் எனும் ஐயம் இயல்பானதே. காரண காரியமின்றி இங்கு எந்த பழக்கமும் நடைமுறையில் நிலைப்பதில்லை. உண்மையில் கசப்பு சுவை என்பது உணவின் விசத் தன்மையை நமக்குச் சொல்லும் ஓர் அறிவிப்பு முரசு. c2r(tas2r) என்பது கசப்புத் தன்மையை நமக்கு உணர்த்தும் ஜீன்.

காடுகளில் வாழ்ந்த மனிதனுக்கு விசத் தன்மையுள்ள பொருட்களை பிரித்தறிய கசப்பு முதன்மை அளவுகோலாக இருந்தது. பிறகு நாளடைவில் வேளாண்மை செய்து சமூகமாக வாழத் துவங்கிய பின் விசத்தன்மையின் குறியீடான கசப்பு உணவு முறையில் இருந்து விலக்கப்பட்டது. இதனால் பல தலைமுறைகளாக கசப்புத் தன்மையை ருசிக்காத, பெரும்பான்மை உலக சமூகங்களின் கசப்பை உணரும் ஜீன் செயல்பாடற்றுப் போனது. எந்த ஒரு ஜீனும் தொடர்ந்து சில தலைமுறைகள் செயல்பாடற்று இருக்கும் பொழுது தனது இயல்பை இழந்து விடுகிறது. இதன் காரணமாக இன்று உலகில் உள்ள பெரும்பான்மை சமூகங்கள் கசப்பை உணரும் திறனை இழந்து வருகிறது. இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப் பட்டுள்ளது – மேற்கோள்

Reference for gene identified for bitter taste
Maehashi, Kenji, et al. “Bitter peptides activate hTAS2Rs, the human bitter receptors.” Biochemical and biophysical research communications 365.4 (2008): 851-855.

References for bitter taste genes anthropology or movement of gene
Kim, U. K., and Dennis Drayna. “Genetics of individual differences in bitter taste perception: lessons from the PTC gene.” Clinical genetics 67.4 (2005): 275-280.
Campbell, Michael C., et al. “Evolution of functionally diverse alleles associated with PTC bitter taste sensitivity in Africa.” Molecular biology and evolution (2011): msr293.
Wooding, Stephen, et al. “Natural selection and molecular evolution in PTC, a bitter-taste receptor gene.” The American Journal of Human Genetics 74.4 (2004): 637-646.
Kim, Unkyung, et al. “Worldwide haplotype diversity and coding sequence variation at human bitter taste receptor loci.” Human mutation 26.3 (2005): 199-204.

இதில் ஆச்சர்யத்தக்க விடயம் என்னவெனில் தமிழர்கள் மட்டுமே இன்று வரை கசப்பை உணரும் திறனை முழுமையாக கொண்டுள்ள இனக்குழுவாக இருப்பதுதான். காரணம் நமது உணவு முறையில் கசப்பிற்கென ஒரு இடம் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. விருப்பமில்லாத ஒரு சுவையை உணவுப் பழக்கத்தில் தொடர்ச்சியாக எடுத்து வர வேண்டுமெனில் அதன் அறிவியல் காரணங்கள் உணராமல் இதனைச் செய்ய இயலாது.

கசப்பு என்றாலே விசம் என முழுவதுமாக கசப்பினைப் புறக்கணித்து வந்த உலக வழக்கத்தின் மத்தியில் கசப்பும் தமக்குத் தேவை என்றுணர்ந்த்து முதன்முறையாக கசப்புத் தன்மை உள்ள வேப்ப மரத்தினை தங்களின் தினசரி வாழ்க்கை முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததே நமது நாகரீக வளர்ச்சி எவர் ஒருவரையும் விட தலையாயதாக இருந்த்திருப்பதன் அத்தாட்சி.

கசப்புத் தன்மையுள்ள வேப்ப மரத்திற்கு நாம் கொடுத்து வந்த முக்கியத்துவம்,

1) பாண்டியர்களின் தேசிய மரம் வேப்ப மரம்
2) பாண்டிய மன்னர்கள் வேப்பம் பூ மாலை சூடியே இருப்பர் (நச்சுக் கிருமிகளை அழிக்கும் கசப்புத் தன்மை கொண்டதென்பதால்)
3) வேப்பம் பூ ரசம், வேப்பம் பூ வடை என சமையலில் மிக முக்கிய இடம்
4) வேப்ப இல்லை பயன்பாடு. குறிப்பாக அம்மை நோயின் தாக்கத்தில் உடல் எதிர்ப்பு சக்தி குறைந்து இருக்கும் பொழுது மற்ற தொற்றுக்கள் தாக்காமல் இருக்க வேப்பிலை வெகுவாகப் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது.
5) வேப்பம் பிசின். கட்டுமானத்திற்கும், சமையல் பாத்திரங்களுக்கான மேல் பூச்சாகவும் பயனில் இருந்து வந்துள்ளது.
6) தமிழ் தெய்வங்களுக்கான வழிபாட்டில் வேப்பம்பூ மாலைக்கு தான் என்றும் முதலிடம்

வேம்பும், கசப்பும் சங்க காலம் தொட்டே தமிழ் எழுத்துக்களில் உவமைப் படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக நாலடியாரின் ஒரு பாடல்,

தக்காரும் தக்கவர் அல்லாரும் தந்நீர்மை
எக்காலுங் குன்றல் இலராவர்! – அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு.

சான்றோரும், சான்றோர் அல்லாதாரும் தத்தம் குணங்களில் எப்போதும் குறையாமல் இருப்பர். வெல்லத்தை யார் தின்றாலும் கசக்காது. வேப்பங்காயைத் தேவரே தின்றாலும் கசக்கும்.

வேம்பிற்கான காப்புரிமையை அமேரிக்கா ஒரு நிறுவனத்திற்கு வழங்கியதும் அதனை எதிர்த்து இந்திய அரசு தொடர்ந்த வழக்கில் ஐயா நம்மாழ்வார் பங்கு பெற்று அந்த காப்புரிமையை ரத்து செய்ததும் நிகழ்கால உண்மை.

ஆயிரம் ஆயிரம் விசமுள்ள கசப்பான மரம், செடிகளுக்கு மத்தியில், தமக்கு நன்மை பயக்கும் ஒரு மரத்தை பிரித்துணர்ந்து அதனைத் தமது உணவு முறையிலும், பழக்கத்திலும் கொண்டு வந்த அறிவுசார் சமூகம் நம் தமிழ்ச் சமூகம் என்று சொன்னால் அது மிகையாகாது.

கசப்பின் முக்கியத்துவம் என்னவெனில் நமக்கு எந்த தீங்கும் விளைவிக்காது நமது உடலில் உள்ள தேவையற்ற கெடுதல் விளைவிக்கும் உயிரிகளை வெளியேற்றுவது. இதன் காரணமாகத்தான் வேப்பம்பூ, பாகற்காய், கசப்புக் கீரை வகைகள் கட்டாயமாக நமது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. மனித இனத்தின் தோற்றுவாயான ஆப்பிரிக்காவில் வாழும் மக்களுக்கே இன்று கசப்பினை உணரும் திறன் குறைந்து வரும் நிலையில் அங்கிருந்து இடப்பெயர்ந்து வந்த தமிழ் குடிகள் மட்டுமே இன்று வரை தம் தன்மை மாறாது இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் பேசப்பட்டிராத துவர்ப்பு சுவையைப் பற்றி அடுத்த வாரம் காணலாம்

நம்ம ஊர் சுவை மிகுந்த பண்டங்களை தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (nativespecial.com)இணையத்தில் ஆர்டர் செய்யலாம்.

(அடுத்த பகுதி)

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Subscribe to get our Latest Updates on your Email!

பிப்பாலி எனும் மிளகின் வரலாறும், சிறப்பும் – தமிழர் உணவின் வரலாறு பகுதி 5

(முந்தைய பகுதி)

முத்துக்கு இணையாக உலக வணிகத்தில் மதிப்பைப் பெற்றிருந்த மிளகுதான் சில நூறு வருடங்களுக்கு முன் உலகவரைபடத்தையே மாற்றி அமைத்தது என்றால் மிகையாகாது. முதன் முதலில் காரத்திற்கு உகந்த பொருளாகத் தமிழர்களால் கண்டெடுக்கப் பட்டது பிப்பாலி எனும் மிளகு. மிளகின் உண்மையான தமிழ்ப் பெயர் பிப்பாலி அதன் மறுவல் தான் கிரேக்கத்தில் பிப்பர் என்றாகி இன்று ஆங்கிலத்தில் பெப்பர் என்று அழைக்கப் பெறுகிறது. தமிழில் மிளகாய் பயன்பாட்டிற்கு வந்த பின் காரத்திற்காக பயன்படுத்தப் படுவதால் பிப்பாலி பெயர் மறைந்து மிளகு என்றபெயர் பயன்பாட்டிற்கு வந்தது.


காரத் தன்மையை நெருப்புக்கு உவமைப் படுத்துவது இயல்பு. காரணம் சூடு பட்டால் உடலில் என்னென்ன சுரப்பிகள்,உணர்வுகள் வினை ஆற்றுமோ அவை அனைத்தும் காரத்திற்கும் வினை ஆற்றும். எனவேதான் காரம் எஸ்.அச்.யு (ஸ்கொபீல்டு ஹீட் யூனிட்) எனப்படும் சூட்டின் அலகினைக் கொண்டு அளக்கப் படுகிறது. இந்த இயல்பின் காரணமாக காரத் தன்மை கொண்ட பொருட்கள் பாக்டீரியாக்களைக் களைந்து விடும் தன்மை கொண்டதாக இருக்கும். எனவேதான் மிளகாய்க் காரம் அதிகம் சேர்த்துக் கொள்ளும் பொழுது நல்ல பாக்டீரியாக்கள் களையப்பட்டு அல்சர் போன்ற சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. ஆனால் மிளகு மட்டும்தான், காரம் இருந்தாலும் அதற்கான தீயவிளைவுகள் எதுவும் அற்ற பொருள். எனவேதான் மிளகு காரத் தன்மைக்கான முதன்மைப் பொருளாகவும் உலகவணிகத்தின் முக்கியப் பொருளாகவும் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்தது. தமிழகத்தில் மிளகாயின் பயன்பாடு சமீபத்திய காலங்களில் தான் அதிகரித்துள்ளது மிக நெடுங்காலமாக நமது உணவுமுறையில் இருந்து வருவது மிளகுதான்.

உலகின் பல்வேறு இடங்களில் மிளகு கிடைக்கப் பெற்றாலும், சரியான காரத் தன்மை கொண்ட மிளகு வகையைத் தேர்வு செய்து அதன் உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்திருந்த ஒரே சமூகம் தமிழ்ச் சமூகம்தான். ஒற்றை வரியில் கூறி முடித்தாலும் இது பல நூறு ஆண்டுகள் நிகழ்த்தப் பட்ட தொடர் முயற்சியின் விளைவாகும். சிந்தனைத் திறனும், சிறந்த சமூகக் கட்டமைப்பும் கொண்ட சமூகத்தினாலேயே இதனைச் சாத்தியபடுத்த முடியும். எடுத்துக் காட்டாக இன்று அமெரிக்காவில் நிகழ்த்தப் பெரும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியக்காரணம் அங்குள்ள கட்டமைப்பு. எனவே சிறந்த கட்டமைப்பு இல்லாமல் எந்த ஒரு புது முயற்சியும் வெற்றி பெற இயலாது.


பெரும் மதிப்பு மிக்க பொருளின் உலகின் மொத்த வணிகமும் கையில் இருந்த பொழுதும் உற்பத்தியைப் பெருக்க இன்று தேயிலைத் தோட்டங்கள் அமைப்பது போல் மோனோகல்ச்சர் செய்யாமல் பெரும் இயற்கைப் புரிதலுடன் காடுகளின் ஊடாகவே மிளகின் உற்பத்தியைப் பெருக்கினர். எனவேதான் இன்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உலகிலேயே அதிகமான தாவர வகைகளைக் கொண்ட இடமாகத் திகழ்கிறது.

உலக வணிகம், இயற்கைப் புரிதலுடனான உற்பத்தி, புதிய விடயங்களின் முன்னேற்றத்திற்கான கட்டமைப்பு எனப் பல்லாயிரம் ஆண்டுக்கு முன்னரே தேர்ந்த சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததற்கு மிளகும் அதன் பிப்பாலி எனும் பெயருமே மிகப் பெரும் சான்று.

பாரம்பரிய கொல்லிமலை மிளகினைத் தற்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் nativespecial.com இணையத்தில் ஆர்டர் செய்யலாம்.

(அடுத்த பகுதி)

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Subscribe to get our Latest Updates on your Email!

புளி (Tamarind) |தமிழர் உணவின் அறிவியல்-4

அமெரிக்கா வாழ் ஆராய்ச்சியாளர் திரு. அலெக்ஸ் கோம்ஸ் அவர்களின் வழிகாட்டுதலில் nativespecial.com வெளியிடும் “தமிழர் உணவின் அறிவியல்” தொடர

(முந்தைய பகுதி)

பகுதி-4
புளி (Tamarind)

முந்தைய பகுதிகளில் பார்த்த இனிப்பு, உப்பு என அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்த பின், உணவைச் சமைத்தல், சுவைப் படுத்துதல், பதப்படுத்துதல் என உணவின் அடுத்த படி நிலைகளை நோக்கி நகர்ந்தது தமிழ்ச் சமூகம். வேகவைத்து உட்கொண்டு வந்த நிலையைத் தாண்டிச் செல்ல தமிழ்ச் சமூகத்திற்குப் பெரும் ஊன்றுகோலாக இருந்தது புளியின் பயன்பாடு. இன்றும் பல நாடுகளின் உணவு முறை வேகவைத்தல் எனும் இடத்தைத் தாண்டி நகரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உணவுச் செரிமானத்தில் பெரும் பங்காற்றுவது வயிற்றில் உள்ள ஹைட்றோ க்ளோரிக் அமிலம். அமிலத் தன்மை செரித்தலுக்குச் செரிவூட்டுகிறது. என்பதை உணர்ந்து அமிலத்தன்மை மிக்க புளியினை உணவில் பயன்படுத்தத் துவங்கியது தமிழ்ச் சமூகம். மேலும் புளியின் அமிலத்தன்மை உணவுப் பொருட்களில் புரதம் போன்ற சத்துக்களை மூடி இருக்கும் நார்ச் சத்தினை உடைத்து உணவினை இளக்கி உடல் சீரணித்துக் கொள்ளும் நிலைக்கு உணவினை மாற்றிவிடும். எளிமையாகச் சொன்னாள் ஒரு மரக்கட்டையைப் பஞ்சு போன்று இளக்குகிறது. இத்தகைய புளியின் பயன்பாடு பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே நமது வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. புளிக் குழம்பு தான் உலகின் மிகப் பழமையான சமையல் முறை என்பதும் புளி ரசம் நமது உண்ணும் முறையில் ஒரு பகுதியாக செரித்தல் பொருட்டு இடம் பெற்று வருவதும் இதற்கான ஆணித்தரமான நிரூபனம்.

இது மட்டும் இன்றி புளிக்கு மற்றொரு குணமும் உண்டு, இதில் உள்ள சைலோ க்ளூக்கன் ஓட்டும் தன்மையற்ற செல்லுலோஸ் மீது படரும் திறன் கொண்டது. எனவே சோற்றுப் பருக்கையில் எளிதில் படர்ந்து ஒட்டிக் கொள்வதால் இதனை உடைத்து பாக்டீரியாக்களால் பருக்கைகளை அணுக இயலாது. இதனால் புளிச் சோறு நீண்ட நாள் கெடுவதில்லை. இதுவே நீண்ட பயணங்களுக்கு கட்டுச் சோறாக புளிச்சோற்றினை எடுத்துச் செல்லும் வழக்கத்தின் காரணம். புளிப்பிற்கு பயன்படுத்தப் படும் தக்காளி, எலுமிச்சை ஆகிய பழங்களை விட புளியில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட் இருப்பது குறிப்பிடத் தக்கது.

புளியியைப் போன்றே மாங்காயும் புளிப்பிற்காக பயன்படுத்தப் பட்டு வந்திருக்கிறது. தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை காரணமாக மாங்காய் அதிகம் விளையும் காலங்களில் புளி விளைச்சல் இருக்காது, அதே போல் புளி விளைச்சல் காலங்களில் மாங்காய் விளைச்சல் இருக்காது. எனவே புளிக்கு மாற்றாக மாங்காய் நமது சமையல் பயன்பாட்டில் எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. உணவில் புளிப்பின் சேர்க்கையின் தேவையை உணர்ந்து அதற்கான தட்டுப்பாட்டினைக் களையும் பொருட்டு நமது நிலப் பரப்பிற்கு ஏற்ப புளிப்புத் தன்மை நிரம்பிய இரு பொருட்களை அவற்றின் விளைச்சலுக்கு ஏற்ப ஒன்றுக்கு ஒன்று மாற்றாக பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே பயன்படுத்தி உள்ளார்கள். இடர் மேலாண்மை (Risk Management) எனும் கருத்தாக்கத்தின் துவக்கம் இதுவெனக் கருதலாம். இத்தகைய அறிவிற்கான அடிப்படை அனுபவமா, அறிவியலா எனும் கேள்விக்கான விடை எதுவாக இருப்பினும், சீரிய சிந்தனைத் திறனும், சமூக அமைப்பும் கொண்ட ஒரு இனக் குழுவினாலேதான் இத்தகையதொரு விடயத்தை வழக்கப் படுத்த முடியும் என்பது உறுதி.

அடுத்த பகுத்தியில் உலகின் வரை படத்தை நிர்ணயித்த மிளகைப் பற்றிக் காணலாம்.

நம்ம ஊர் திண்பண்டங்கள் தற்பொழுது nativespecial.com இணைய தளத்தில் ஆன்லைனில் வாங்கலாம்

“தமிழர் உணவின் அறிவியல்” அடுத்த பகுதி.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Subscribe to get our Latest Updates on your Email!

கருப்பட்டி (Karuppatti) |தமிழர் உணவின் அறிவியல்-2

அமெரிக்கா வாழ் ஆராய்ச்சியாளர் திரு. அலெக்ஸ் கோம்ஸ் அவர்களின் வழிகாட்டுதலில் nativespecial.com வெளியிடும் “தமிழர் உணவின் அறிவியல்” தொடர்

(முந்தைய பகுதி)

பகுதி-2
கருப்பட்டி (Karuppatti)

சக்கரை (குளுக்கோஸ்) இன் தேவையை நிறைவு செய்வதே சமூகமாக வாழத் துவங்கிய இனங்களுக்கு இருந்த முதல் சவால். மூளை மற்றும் உடலின் இயக்கத்துக்கான சக்திக்கு சக்கரை தான் மூலம் என்பதால்சக்கரைத் தேவையில் தன்னிறைவு அடைவதை நோக்கிய பயணம் ஒவ்வொரு இனக்குழுவுக்கும்அத்தியாவசியமான ஒன்றானது. தாவரங்கள் தங்களுக்குத் தேவையான சக்கரையை ஒளிச்சேர்க்கை(Photosynthesis) மூலம் பெற்றுக் கொள்கிறது.

மனிதனுக்கு அந்த ஆற்றல் இல்லாததால் துவக்கத்தில் தேன்,பூக்கள் என சக்கரைக்கான தேவையைப் பூர்த்தி செய்து வந்தான். ஒரு கட்டத்தில் தேவை அதிகரிக்க இன்றைய வைட்டமின் மாத்திரைகளில் எப்படித் தேவையான வைட்டமின் மட்டும் பிரித்தெடுக்கப் பட்டு திட வடிவில் சேர்த்துக் கொடுக்கப் படுகிறதோ அது போலவே சக்கரையை மட்டும் பிரித்தெடுக்கும் வழிகளைத் தேடலானான். அத்தகையதொரு கால கட்டத்தில் உலகின் முதல் வேதியியல் கண்டுபிடிப்பாய்க்கருப்பட்டியை உருவாக்கினர் குமரிக் கண்ட மக்கள் (இன்றைய தமிழர்கள்).

சூரிய சக்தியை சக்கரையாக மாற்றும் ஆற்றல் படைத்து தாவரங்கள் பூக்கும் காலத்தில்அதிகப்படியான சக்கரையை பூக்களை நோக்கிச் செலுத்தும். இதனை உணர்ந்த காரணத்தால் பனை மற்றும் தென்னை மரங்கள் பாலையிட்டுப் பூக்கும் தருவாயில் அதனை வெட்டி விட்டுக் குடுவைகள்கட்டி வடியும் நீரைச் சேகரித்தனர். இயல்பாக அமிலத்தன்மை கொண்ட நீரினைச் சமன்படுத்தச் சுண்ணாம்பு தடவிய குடுவையில் சேகரித்தனர்.

சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர், இல்லையென்றால்அமிலத் தன்மை அதிகரித்து கள்ளாகி விடும். அதிகப்படியான சுண்ணாம்பு சேர்த்தாலும் காரம்அதிகரித்து கீடோன் (Ketone) எனும் வேதிப் பொருளாக மாறிவிடும். சுண்ணாம்பிற்கான மூலமாக முதலில்இருந்தது தமிழக, இலங்கைக்கு இடையிலான சுண்ணாம்புக் கால்வாயில் உள்ள பவளப் பாறைகள்தான். எனவேதான் சக்கரை உற்பத்தி முதலில் நமக்குச் சாத்தியம் ஆயிற்று.

இவ்வாறு சேகரிக்கப் பட்ட பதநீரை நீண்ட நாட்களுக்குச் சேகரித்து வைக்கவும், தேவையானஇடங்களுக்கு அனுப்பி விற்பனைப் பொருளாக மாற்றவும் அதனை நெய்யும் (crystallization) முறை உருவாக்கப்பட்டது. பதநீரில் உள்ள கலவைகளைப் பிரித்துத் தனிமைப் படுத்தும் பொழுது, பிரித்தெடுக்கப்பட்ட சக்கரை ஒன்றுடன் ஒன்று சேர்ந்த கட்டியாகிறது. இப்படி ஒன்றுடன் ஒன்று தன்னை ஒழுங்கமைத்துக்கொண்டு நிற்பதே நெய்தல் எனப்பட்டது. துணி நெய்தல், நெய்தல் தினை ஆகியவற்றின் பெயர்க் காரணமும் இதுவே. பதநீரைக் காய்ச்சி அதில் உள்ள கலவைகளைப் பிரித்து சக்கரையின் சேர்மஒருங்கில் கருப்பட்டி உருவாக்கப் பட்டது..

வேதியியல் அறிவு, பானைகள் செய்யும் திறன், கட்டிப் படுத்தும் வழி முறை, காய்ச்சும் களன்கள், வேதியியல் புரிதல் என அனைத்தும் கை கொண்ட சமூகமாக பல்லாயிரம் வருடங்களுக்கு முன் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பதற்கான உறுதியான சாட்சி கருப்பட்டி.

கருப்பட்டியின் சிறப்புகள்:

1) எந்த வேதியல் சேர்மானமும் செய்யாமல் இயற்கையான முறையில் உருவாக்கப் படுவதால், இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் செறிவாகக் கருப்பட்டியில் உள்ளது

2) பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால, இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்

3) காபிக்கு சீனிக்குப் பதிலாக கருப்பட்டி இட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

4) கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளை வலிமைப் படுத்தும் ஆற்றல் கருப்பட்டிக்கு உண்டு. கிராமங்களில் கோழிகளுக்கு கால் முறிந்து விட்டால் கருப்பட்டித் தண்ணீர் வைக்கும் வழக்கம் இன்றும் உண்டு.

இனிப்பும், உப்பும் உற்பத்தி செய்து கொண்ட சமூகங்கள் தான் உணவின் எல்லைகளை விரித்து நாகரீக வளர்ச்சிக்குள் பாய்ந்தன. அதில் முன்னோடியான நாம் உப்பின் உற்பத்தியை எப்படிச் செய்தோம் என்பதை அடுத்தப் பகுதியில் காணலாம்.

நம்ம ஊர் திண்பண்டங்கள் தற்பொழுது nativespecial.com இணைய தளத்தில் ஆன்லைனில் வாங்கலாம்

“தமிழர் உணவின் அறிவியல்” அடுத்த பகுதி.

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Subscribe to get our Latest Updates on your Email!

தமிழர் உணவின் அறிவியல் – (The Tamil Food Science)

ஒரு நிலப்பரப்பின் தட்பவெட்ப நிலையே அங்கு வாழும் மக்களின் உணவுப் பழக்கத்தைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணி. எடுத்துக் காட்டாக அமெரிக்கா, கனடா போன்ற குளிரான பகுதிகளில் தயிர் பயன்பாட்டில் இல்லை காரணம் குளிர் பாக்டீரியாவின் வளர்ச்சி வேகத்தைக் கட்டுப் படுத்தும் அதனால் அவர்கள் அதிகம் சீஸ் பயன்படுத்துகிறார்கள். ஆனால் நம்மைப் போன்ற வெப்பப் பகுதிகளில் பெரும்பாலும் தயிர் உணவின் முக்கிய பகுதியாய் இருக்கும் காரணம் வெப்பம் பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

ஒரு இனக்குழுவின் உணவுக்கு கலாச்சாரமே அவர்களின் நாகரிக வளர்ச்சிப் பாதையின் தொடர்புச் சங்கிலி. ஒரு இனக்குழு தனது நிலப்பரப்பில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தனது உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்கிறது. பின்பு தங்களின் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் உணவுப் பழக்கங்களும் பரிணாம வளர்ச்சி பெற்று உணவே மருந்து எனும் நிலையை நோக்கி நகர்கிறது. தேங்காய், நொங்கு, பதநீர், தேன் போன்ற இயற்கை உணவுகளே நமது உணவுக்கு கலாச்சாரத்தின் துவக்கம். பின்பு நிலத்தைப் பக்குவப படுத்தி படிப்படியாக உணவின் அடுத்த படி நிலைக்கு தங்களை நகர்த்திக் கொண்டனர் தமிழர்கள்.

எந்த ஒரு இனக்குழு தங்களுக்கு தேவையான சர்க்கரைக்கான தேவைகளை உணர்ந்து அதற்கான வழிமுறைகளைக் கண்டதோ அவை அனைத்தும் நாகரிக வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலைக் கண்டன. அவ்வகையில் தேனிலிருந்து நகர்ந்து கருப்பட்டியைத் தங்களின் உணவின் தேவைக்காக முதன்முதலில் தமிழர்கள் பயன்படுத்தத் துவங்கியதே உலகின் முதல் நாகரிக மேம்பாடு. அறிவியலோ அல்லது அனுபவமோ, ஒரு அறிவுசார் இனக்குழுவினாலேயே இது சாத்திய படும்.

இப்படி உலகின் தலை சிறந்த உணவுக்கு கலாச்சாரத்தையும், தொடர்ச்சியையும் கொண்டுள்ள தமிழர்கள் இன்றுவரை அதனை அறிவியல் பூர்வமாக ஆவணப் படுத்தும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. வைன், பிரெட் போன்றவற்றிற்கு உள்ள ஆவணங்களில் நூறில் ஒரு பங்கு கூட கல், பதநீர், புட்டு போன்றவற்றிற்கு இல்லை. இவற்றை ஆவணப் படுத்தும் முதல் முயற்சியின் துவக்கமே இந்த “தமிழர் உணவின் அறிவியல்” தொடரின் நோக்கம்.

இதன் துவக்கமாக நமது உணவுக்கு கலாச்சார வளர்ச்சியின் முதல் வித்தான கருப்பட்டியின் ஆச்சர்யமான அறிவியல் தகவல்கள் பற்றி அடுத்த வாரம் காணலாம்.

இத்தொடருக்காக அறிவியல்ரீதியான தகவல்களைத் தந்து உதவும் அமெரிக்கா வாழ் விஞ்ஞானி திரு. அலெக்ஸ் கோம்ஸ் அவர்களுக்கு nativespecial.com இன் நன்றிகள்.

அடுத்த பகுதி
Please Subscribe to our Newsletter below in order to receive our Write ups continuously.  All our write ups will provide information and knowledge on our Native Food Science with Scientific and Logical Approach.  

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Subscribe to get our Latest Updates on your Email!

 

Deepavali Sweets Online

Native Special

ஆறு வகையான மிகச் சிறந்த இனிப்பு பெட்டகங்களை இந்த வருட தீபாவளிக்கு அறிமுகம் செய்திருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல் இணையம். இந்தியா மற்றும் வெளிநாட்டுத் தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்ற நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தின் இந்த தீபாவளி பரிசுப் பெட்டகங்கள் வெகுவாக அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

முதன் முறையாக நம்ம ஊர் பாக்கு மட்டையினைக் கொண்டு சிறந்த தீபாவளி பெட்டகத்தினை வடிவமைத்துள்ளார்கள். 200 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை நமது தேவைக்கேற்ப இனிப்புகள் கலவையினை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். திருநெல்வேலி நெய் அல்வா, கருப்பட்டி கடலை உருண்டை,கருப்பட்டி நெய் மைசூர்பாக் என நம்ம ஊரின் பாரம்பரிய பண்டங்கள் அனைத்தையும் இந்த தீபாவளிக்கு நாம் பரிசளிக்கலாம்.

நீங்கள் ஒரு நிறுவனம் நடத்துபவரென்றால் தங்களின் பணியாளர் அல்லது தொடர்புகளுக்கு தீபாவளி இனிப்பு பாக்ஸ் வழங்க நேட்டிவ்ஸ்பெஷலின் இனிப்பு பெட்டகங்கள் மிகச் சிறந்த தேர்வு.

இனிப்பு பெட்டகங்களின் பெயர்கள் முதற்தொண்டு நம் மண் வாசனையினைக் கொண்டு வந்திருக்கிறோம். பேர் உவகைப் பெட்டகம், பனஞ்சுவைப் பெட்டகம் (கருப்பட்டி இனிப்புகள் மட்டும் கொண்டது) என பல வகையான இனிப்பு பெட்டகங்கள் உண்டு.

முன்னதாக பதிவு செய்வோருக்கு 10% தள்ளுபடி இந்த இரு நாட்களுக்கு மட்டும். எங்களது எண்ணில் தொடர்பு கொண்டு புக் செய்தால் போதும், மினிமம் 25 பாக்ஸ்கள் புக் செய்ய வேண்டும்.

தொடர்புக்கு: +918098619006.

இது தவிர நேட்டிவ்ஸ்பெஷலின் பண்டங்களை ஆனலைனில் ஆர்டர் செய்து வீட்டில் ருசிக்கு இந்த லிங்கில் செல்லலாம் . https://nativespecial.com/

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Subscribe to get our Latest Updates on your Email!

தமிழர்களின் கைமருந்து நெல்லிக்காய் சாறு

Amla

தமிழர்களின் கைமருந்து நெல்லிகாய் சாறு (nellikai juice/amla juice benefits) :-

இயற்கையோடு ஒன்றிவாழ்ந்த நம் தமிழ் முன்னோர்கள் உணவு முதல் மருந்து வரை இயற்கையின் வளங்களை பயன்படுத்தி வந்தனர்.அதனால் அவர்களின் ஆயுட்காலமும் 100 க்கும் அதிகமாக இருந்தது.இன்றைய சூழ்நிலையில் மனிதன் நவீனம் என்ற பெயரில் உடல்பருமன்,சிறுவயதிலே கண் குறைப்பாடு ,இளநரை,சொத்தைப்பல்,நீரிழிவு நோய் என நோய்களை விலைகொடுத்து வாங்கிவிட்டான். இன்று ஒருவர் 100 வயதை அடைந்தாலே விழா கொண்டாடும் அவலம் நம்மிடையே வந்துவிட்டது.காரணம் ,நமது ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை வெறும் ருசிக்காக சாப்பிட்டு தீய கொழுப்புகளை மட்டும் சேர்த்து உடலினை பராமரிக்க மறந்துவிட்டோம் .

நம் முன்னோர்கள் உணவை மருந்தாக பயன்படுத்தினர் .ஆனால் நாம் மருந்தைத்தான் உணவாக பயன்படுத்துகிறோம் .இந்த நிலையை முழுமையாக மாற்ற தற்போது இயலவில்லை என்றாலும் அதற்கான முயற்சியை செய்தால் தான் நம் அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக அமையும்.அதற்கு என்ன செய்ய வேண்டும்?

நாம் மறந்து போன ,மறைந்து போன நமது ஆரோக்கியமான பாரம்பரிய பண்டங்களை ,உணவுகளை மீண்டும் அறிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் .அந்த வகையில் நம் தமிழர்கள் பயன்படுத்திய உணவு மருந்துகளில் ஒன்று “நெல்லிக்காய்”

நெல்லிக்காய்க்கும் ,தமிழர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை பலவழிகளில் அறியலாம்.ஆயுர்வேத சாஸ்திரம் முதல் சங்ககால செய்யுள்கள் வரையிலும் நெல்லிக்காயை பற்றி சொல்லாத இடங்களே இல்லை.அந்த அளவிற்கு நெல்லிக்காயின் பயன்கள் அளவில்லாதது.

நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்களை சக்தியாக மாற்றுவதில் பித்தப்பை முக்கிய பங்கு வகிக்கிறது .அதில் ஏற்படும் கற்களை கரைக்க நெல்லிசாறு ஒரு சிறந்த மருந்து .

கண்ட உணவுகளை உண்ணுவதனால் வயிற்றில் ஏற்படும் கோளாறுகள்,புண்களுக்கு நெல்லி ஒரு சிறந்த நிவாரணி.உடல் பருமனை குறைக்க உதவும்

ரத்தக்குழாய்களில் ஏற்படும் புற்றுகளை தடுத்து அளிக்கிறது .எனவே புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்து .

கர்பிணி பெண்களுக்கு மிகவும் ஏற்றது .முக்கியமாக மகப்பேறுகாலங்களில் உதவும்

இத்தனை பயன்களை தருவதினால் தினமும் ஒன்று என சாப்பிட்டுவர நம்மை எந்த நோய் தொற்றும் அண்டாமல் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளலாம்.

இதை ஜூஸ் செய்து வைத்துக்கொண்டால் நம் அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும். நெல்லி ஜூஸ் (nellikai juice / amla juice) தினமும் பயன்படுத்தினால் சிறிது காலத்தில் மாற்றத்தை உணர்வீர்கள். நன்றி!!


நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்களை சக்தியாக மாற்றுவதில் பித்தப்பை முக்கிய பங்கு வகிக்கிறது .அதில் ஏற்படும் கற்களை கரைக்க நெல்லிசாறு ஒரு சிறந்த மருந்து .

கண்ட உணவுகளை உண்ணுவதனால் வயிற்றில் ஏற்படும் கோளாறுகள்,புண்களுக்கு நெல்லி ஒரு சிறந்த நிவாரணி.உடல் பருமனை குறைக்க உதவும்

ரத்தக்குழாய்களில் ஏற்படும் புற்றுகளை தடுத்து அளிக்கிறது .எனவே புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்து .

கர்பிணி பெண்களுக்கு மிகவும் ஏற்றது .முக்கியமாக மகப்பேறுகாலங்களில் உதவும்

இத்தனை பயன்களை தருவதினால் தினமும் ஒன்று என சாப்பிட்டுவர நம்மை எந்த நோய் தொற்றும் அண்டாமல் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளலாம்.

இதை ஜூஸ் செய்து வைத்துக்கொண்டால் நம் அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும். நெல்லி ஜூஸ் (nellikai juice / amla juice) தினமும் பயன்படுத்தினால் சிறிது காலத்தில் மாற்றத்தை உணர்வீர்கள். நன்றி!!
Now readily available/ Buy Now @  https://nativespecial.com/gb/product/raw-amla-juice-online/

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Subscribe to get our Latest Updates on your Email!

 

தலைமுறை தழைக்க வேர்கடலை

Peanut

தலைமுறை தழைக்க உதவும் வேர்கடலை:

வேர்க்கடலை (நிலக்கடலை) ஒரு மிகச்சிறந்த பயிர் வகை. உலக அரசியல் கவனத்தை பெரும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது வேர்க்கடலை. இந்தியாவிலும் சீனாவிலும் அதிகம் பயன்பாட்டில் உள்ள பயிர் நிலக்கடலை.

16 ம் நூற்றாண்டில் உலகம் முழுக்க பரவ தொடங்கியது வேர்க்கடலை.

நம் ஊரில் நமது சமையல் பயன்பாட்டில் முக்கியப் பங்குவகிப்பது கடலையில் இருந்து எடுக்கப்படும் கடலை எண்ணெய் தான், இதனால் இயற்கையாகவே உலகில் மற்ற இன மக்களை சந்தித்த உடல் உபாதைகள், நோய்கள் நமக்கு வரவில்லை. வேர்கடலை இனப்பெருக்கத்திற்கு மிகவும் உகந்தது. காட்டில் கடலை சாகுபடி இருக்கும் காலத்தில் எலிகள் அதிக குட்டிகள் ஈனும், அதேபோல் கடலை செடி மேயும் ஆடு,மாடு என்று அணைத்து உயிர் இனங்களும் குறையின்றி குட்டிகள் ஈனும். மனிதனுக்கும் அவ்வாறே. வேர்கடலையுடன் வெல்லம் சேர்த்து சாபிட்டு வருபவர்கள் நம்ம ஊர் இலவட்டகல்லை அசால்டாக தூக்கிவிடுவர்.


வேர்கடலை சத்துக்கள்:

நிறைய புரதம் – இறைச்சி, முட்டை இல் இருப்பதைவிட அதிக புரதம்.

இரும்புசத்து, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் E, பாஸ்பரஸ், தையாமின், நையாசின்.

நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது (Reference Times Of India – Health & Fitness: https://www.facebook.com/TimesofIndia/videos/2060720077369590/).

அந்நிய ஆட்சியில் நாம் இருந்தபோது ஆங்கில மருத்துவம் சொல்லு சில விஷயங்களுக்கு நமது வேர்க்கடலை இடைஞ்சலாக இருந்தது அதற்காக பல திட்டமிட்ட தகவல்கள் பரப்பப்பட்டன. உதாரனமாக நிலக்கடலை சாபிட்டால் உடல் எடை கூடும் என்று ஒரு தவறான புரிதல் உள்ளது அது உண்மையில்லை, மாறாக உடல் எடை குறைக்கும் ஒரு நல்ல டயட் உணவுதான் வேர்க்கடலை.

இவ்வளவு சத்துக்களும், மகத்துவமும் கொண்ட வேர்க்கடலை முன்பை விட இன்று நமது பயன்பாட்டில் இருந்து குறைத்திருக்கிறது. மற்ற உலக நாடுகளில் வேர்கடலை பயன்பாடு மிகவும் அதிகரித்திருக்கிறது. நம்மிடம் பாதாம் பிஸ்தா போன்ற அணிய பொருட்களை சந்தைபடுத்த வேர்கடலைமீது திட்டமிட்டே பல தவறான பரப்புரைகள் செய்யப்பட்டன, கடலை எண்ணெய் கொழுப்பை அதிகரிக்கும், இதயகொளறு ஏற்ப்படுத்தும், உடல் எடை கூடும் போன்ற பல தவறான செய்திகள் பரப்பப்பட்டன. நாமும் அதன் காரணமாக நமது வாழ்க்கை முறைமாற்றதில் நமது மண்ணிற்கு சிறிதும் தொடர்பில்லாத பெயர்தெரியாத பல எண்ணைகளை பயன்படுத்துகிறோம். அதுமட்டும் இல்லாமல் நமது பாரம்பரிய வாழ்க்கை முறையில் நிலக்கடலையில் செய்த பல பலகாரங்கள் தினசரி பயன்பாட்டில் இருந்தன. அதில் ஏறத்தாழ அனைத்தையும் இன்று இழந்துவிட்டோம்.

இன்றைய இளைய சமுதாயம் கல்வியில் அடுத்தகட்டத்தில் நின்று நாம் இழந்த பல விசயங்களை உண்மை அறிந்து மீட்டெடுக்கும் முயற்சியில் செயல்படுவது ஆறுதல் தருகிறது.

வேர்க்கடலையும் வெல்லமும் சேர்த்து செய்த கடலை உருண்டை (Kadalai Urundai)குழந்தைகளுக்கு மிகவும் ஆரோகியம் தரும் ஒரு பலகாரம். தினமும் உட்கொள்வது சாலச்சிறந்தது. உயர் நாட்டு ரக வேர்க்கடலை சுத்தமான குண்டு வெல்லம் சேர்த்து வீட்டு தயாரிப்பில் “வேர்க்கடலை உருண்டை”  (Kadalai Urundai) ருசிக்க விரும்புவோர் நேடிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com/gb/product/idicha-verkadalai-urundai-crushed-peanut-balls/)என்ற இணைய லிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

நம் பாரம்பரிய உணவு முறை தகவல்களை உங்களுடன் பகிர்த்துகொன்டத்தில் மகிழ்ச்சி அடைகிறோம்! நன்றி!!!

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Subscribe to get our Latest Updates on your Email!