தலைமுறை தழைக்க வேர்கடலை

தலைமுறை தழைக்க உதவும் வேர்கடலை:

வேர்க்கடலை (நிலக்கடலை) ஒரு மிகச்சிறந்த பயிர் வகை. உலக அரசியல் கவனத்தை பெரும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது வேர்க்கடலை. இந்தியாவிலும் சீனாவிலும் அதிகம் பயன்பாட்டில் உள்ள பயிர் நிலக்கடலை.

16 ம் நூற்றாண்டில் உலகம் முழுக்க பரவ தொடங்கியது வேர்க்கடலை.

நம் ஊரில் நமது சமையல் பயன்பாட்டில் முக்கியப் பங்குவகிப்பது கடலையில் இருந்து எடுக்கப்படும் கடலை எண்ணெய் தான், இதனால் இயற்கையாகவே உலகில் மற்ற இன மக்களை சந்தித்த உடல் உபாதைகள், நோய்கள் நமக்கு வரவில்லை. வேர்கடலை இனப்பெருக்கத்திற்கு மிகவும் உகந்தது. காட்டில் கடலை சாகுபடி இருக்கும் காலத்தில் எலிகள் அதிக குட்டிகள் ஈனும், அதேபோல் கடலை செடி மேயும் ஆடு,மாடு என்று அணைத்து உயிர் இனங்களும் குறையின்றி குட்டிகள் ஈனும். மனிதனுக்கும் அவ்வாறே. வேர்கடலையுடன் வெல்லம் சேர்த்து சாபிட்டு வருபவர்கள் நம்ம ஊர் இலவட்டகல்லை அசால்டாக தூக்கிவிடுவர்.


வேர்கடலை சத்துக்கள்:

நிறைய புரதம் – இறைச்சி, முட்டை இல் இருப்பதைவிட அதிக புரதம்.

இரும்புசத்து, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் E, பாஸ்பரஸ், தையாமின், நையாசின்.

நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது (Reference Times Of India – Health & Fitness: https://www.facebook.com/TimesofIndia/videos/2060720077369590/).

அந்நிய ஆட்சியில் நாம் இருந்தபோது ஆங்கில மருத்துவம் சொல்லு சில விஷயங்களுக்கு நமது வேர்க்கடலை இடைஞ்சலாக இருந்தது அதற்காக பல திட்டமிட்ட தகவல்கள் பரப்பப்பட்டன. உதாரனமாக நிலக்கடலை சாபிட்டால் உடல் எடை கூடும் என்று ஒரு தவறான புரிதல் உள்ளது அது உண்மையில்லை, மாறாக உடல் எடை குறைக்கும் ஒரு நல்ல டயட் உணவுதான் வேர்க்கடலை.

இவ்வளவு சத்துக்களும், மகத்துவமும் கொண்ட வேர்க்கடலை முன்பை விட இன்று நமது பயன்பாட்டில் இருந்து குறைத்திருக்கிறது. மற்ற உலக நாடுகளில் வேர்கடலை பயன்பாடு மிகவும் அதிகரித்திருக்கிறது. நம்மிடம் பாதாம் பிஸ்தா போன்ற அணிய பொருட்களை சந்தைபடுத்த வேர்கடலைமீது திட்டமிட்டே பல தவறான பரப்புரைகள் செய்யப்பட்டன, கடலை எண்ணெய் கொழுப்பை அதிகரிக்கும், இதயகொளறு ஏற்ப்படுத்தும், உடல் எடை கூடும் போன்ற பல தவறான செய்திகள் பரப்பப்பட்டன. நாமும் அதன் காரணமாக நமது வாழ்க்கை முறைமாற்றதில் நமது மண்ணிற்கு சிறிதும் தொடர்பில்லாத பெயர்தெரியாத பல எண்ணைகளை பயன்படுத்துகிறோம். அதுமட்டும் இல்லாமல் நமது பாரம்பரிய வாழ்க்கை முறையில் நிலக்கடலையில் செய்த பல பலகாரங்கள் தினசரி பயன்பாட்டில் இருந்தன. அதில் ஏறத்தாழ அனைத்தையும் இன்று இழந்துவிட்டோம்.

இன்றைய இளைய சமுதாயம் கல்வியில் அடுத்தகட்டத்தில் நின்று நாம் இழந்த பல விசயங்களை உண்மை அறிந்து மீட்டெடுக்கும் முயற்சியில் செயல்படுவது ஆறுதல் தருகிறது.

வேர்க்கடலையும் வெல்லமும் சேர்த்து செய்த கடலை உருண்டை (Kadalai Urundai)குழந்தைகளுக்கு மிகவும் ஆரோகியம் தரும் ஒரு பலகாரம். தினமும் உட்கொள்வது சாலச்சிறந்தது. உயர் நாட்டு ரக வேர்க்கடலை சுத்தமான குண்டு வெல்லம் சேர்த்து வீட்டு தயாரிப்பில் “வேர்க்கடலை உருண்டை”  (Kadalai Urundai) ருசிக்க விரும்புவோர் நேடிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com/product/idicha-verkadalai-urundai-crushed-peanut-balls) என்ற இணைய லிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

நம் பாரம்பரிய உணவு முறை தகவல்களை உங்களுடன் பகிர்த்துகொன்டத்தில் மகிழ்ச்சி அடைகிறோம்! நன்றி!!!

Looking forward for your support in Documenting our “NATIVE FOOD CULTURE”.
SUBSCRIBE TO RECEIVE OUR WRITE UPS :

Subscribe to get our Latest Updates on your Email!